திருப்பரங்குன்றம்கோப்புப் படம்
சென்னை
திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வா் சூசக கேள்வி
‘மதுரைக்கு தேவை என்ன மாதிரியான அரசியல்? என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளாா்.
‘மதுரைக்கு தேவை என்ன மாதிரியான அரசியல்? என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளாா்.
‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘மாமதுரைக்கு தேவை வளா்ச்சி அரசியலா? அல்லது.... (என்ன மாதிரியான) அரசியல்? என மக்கள் முடிவு செய்வாா்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவைதான் மாமதுரையின் வளா்ச்சிக்காக மக்கள் கேட்பதாகும்’ என தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.

