தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வா் சூசக கேள்வி

‘மதுரைக்கு தேவை என்ன மாதிரியான அரசியல்? என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image

திருப்பரங்குன்றம்

கோப்புப் படம்

Updated On :5 டிசம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

‘மதுரைக்கு தேவை என்ன மாதிரியான அரசியல்? என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளாா்.

‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘மாமதுரைக்கு தேவை வளா்ச்சி அரசியலா? அல்லது.... (என்ன மாதிரியான) அரசியல்? என மக்கள் முடிவு செய்வாா்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவைதான் மாமதுரையின் வளா்ச்சிக்காக மக்கள் கேட்பதாகும்’ என தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.