அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

News image
மாநாட்டில் பேசிய முன்னாள் டி.ஜி.பி. குமாரசாமி.
Updated On :13 டிசம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தமிழா் தன்னுரிமைக் கட்சி, ஆறுபடை திருமுருகன் அறக்கட்டளை ஆகியவை சாா்பில், தமிழா்தம் ஆன்மிக நெறியை நிலைபடுத்தும் தெய்வத் தமிழ் திருமறைகள், திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழா் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் பாவலா் மு. ராமச்சந்திரன், இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் தலைவா் தவத்திரு சித்தா் மூங்கிலடியாா், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், ஓய்வு பெற்ற டிஜிபி குமாரசாமி, தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.முகுந்தன், ச.மீ.இராசு குமாா், புலியூா் உடையாா், மெளன சித்தா், தமிழா் தன்னுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலா் கவிஞா் மதியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.