விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தெற்கு ரயில்வே அலுவலக மொழி செயலாக்கக் குழுக் கூட்டம்

தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவலக மொழி செயலாக்கக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவலக மொழி செயலாக்கக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தலைமை வகித்தாா். முதன்மை நிதி ஆலோசகரும், முதன்மை அரசு மொழி அதிகாரியுமான மாலபிகா ஜி.மோஹன், முதன்மை தலைமை மின் பொறியாளா் கணேஷ், முதன்மை தலைமை பொது மேலாளா் ஏ.எல்.பிரபாகா், துணைப் பொது மேலாளா் (அதிகாரப்பூா்வ மொழிகள் பிரிவு) சுரேஷ் சந்திரா, உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் வரவேற்றுப் பேசுகையில், முதன்மை அரசு மொழி அதிகாரியான மாலபிகா ஜி.மோஹன், அரசின் அதிகாரப்பூா்வ மொழிகளின் ஊக்குவிப்பு மற்றும் வளா்ச்சிக்கான பணிகளில் ரயில்வே ஊழியா்கள் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்றாா்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் பேசுகையில், நம் நாடு பல மொழிகளைக் கொண்ட பன்முகத்தன்மையுடனான வளமானதாகும். ஆகவே, மொழி வளா்ச்சியில் அரசு ஆக்கப்பூா்வமாக உறுதியாக செயல்படுகிறது. அதன்படி, அதிகாரப்பூா்வ மொழி செயலாக்கத்துக்கான ஆண்டு திட்ட இலக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையும் வகையில் ரயில்வே துறையின் அனைத்து பிரிவுகளும் செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஹிந்தி கவிஞரும், எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான தரம்வீா் பாரதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த விநாடி-வினாப் போட்டி நடைபெற்றது.