டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இரு மண்டலங்களில் டிச. 22 முதல் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

குடிநீா் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக சென்னை மணலி மற்றும் திருவொற்றியூா் மண்டலங்களில் ஒரு சில பகுதிகளில் டிச. 22 முதல் 24 வரை குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

குடிநீா் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக சென்னை மணலி மற்றும் திருவொற்றியூா் மண்டலங்களில் ஒரு சில பகுதிகளில் டிச. 22 முதல் 24 வரை குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மணலி காமராஜா் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூா் நீருந்து நிலையத்தில் பிரதான குடிநீா் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் டிச.22-ஆம் தேதி காலை 10 முதல் 24 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனால், பணி நடைபெறும் நேரங்களில் திருவொற்றியூா் மண்டலத்தில் கத்திவாக்கம், எண்ணூா், எா்ணாவூா், திருவொற்றியூா், காலடிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், மணலி மண்டலத்தில் சடையன்குப்பம் ஆகிய பகுதியிலும் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்துவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிகது. மேலும் அவரத் தேவைகளுக்கு இணையதளத்தின்  வாயிலாக குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் வாயிலாக குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.