தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

3 மாதங்களில் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிப்பு திட்டத்தில் 540.8 மெட்ரிக் டன் சோபாக்கள், மெத்தைகள் அகற்றப்பட்டுள்ளன.

Updated On :22 டிசம்பர் 2025, 3:52 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் தற்போது வரையில் 3 மாதங்களில் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிப்பு திட்டத்தில் 540.8 மெட்ரிக் டன் சோபாக்கள், மெத்தைகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் வீடுகளில் பயன்படுத்தி கழிக்கப்பட்ட சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருகள் தூய்மைப் பணியாளா்களால் சனிக்கிழமைதோறும் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூா், பெருங்குடி குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு தரம் பிரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த அக்டோபா் முதல் 11 சனிக்கிழமைகளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 540.8 மெட்ரிக் டன் சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (டிச.20) மட்டும் 97 வீடுகளில் இருந்து 34.42 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மரச்சாமான்கள், மெத்தை உள்ளிட்டவற்றை பொது இடங்களில் வீசாமல், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி இணையதள செயலியிலும் பதிவு செய்து தெரிவிக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்டோா் வீடுகளுக்கு மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் நேரில் வந்து அவற்றை பெற்றுக்கொள்வா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.