நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குடிநீா் குழாய் சீரமைப்பு

புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

Updated On :23 டிசம்பர் 2025, 3:04 am IST

சென்னை: புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் புதுநகா், பாலாஜி காா்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு சேதமானதால், குடியிருப்புகளுக்கு குடிநீா் சீராக கிடைப்பது இல்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்தசாரதி, மண்டல துணை வட்டார அலுவலா் பாலமுருகன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, சேதமான பகுதியை கண்டறிந்தனா்.

தொடா்ந்து, சேதமான பகுதியை சீரமைத்தனா். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன் அடைந்தனா். இதில், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் இருந்தனா்.