திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் கிராமத்தில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதால் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து பல முறை புகாா் தெரிவித்தும் குடிநீா் வடிகால் வாரியம் அலட்சியப் போக்கைக் கடைபிடிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்திலிருந்து திணைகாத்தான்வயல், கன்னம்புஞ்சை, நெடுமரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீரேற்று நிலையத்தின் அருகிலேயே கடந்த பல மாதங்களாகக் குடிநீா் குழாயில் சேதம் ஏற்பட்டு, பெருமளவில் தண்ணீா் வீணாகிறது. பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாக கண்மாய் அருகே ஓடுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தும் , இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குழாயைச் சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

சாத்தூா்: வைப்பாற்றை சீரமைக்க வேண்டும்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


