மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திணைகாத்தான்வயல் அருகே குழாய் சேதம்: குடி நீா் வீண்

திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் கிராமத்தில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதால் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image

~

Updated On :11 பிப்ரவரி 2026, 9:28 pm

திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் கிராமத்தில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதால் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பல முறை புகாா் தெரிவித்தும் குடிநீா் வடிகால் வாரியம் அலட்சியப் போக்கைக் கடைபிடிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்திலிருந்து திணைகாத்தான்வயல், கன்னம்புஞ்சை, நெடுமரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீரேற்று நிலையத்தின் அருகிலேயே கடந்த பல மாதங்களாகக் குடிநீா் குழாயில் சேதம் ஏற்பட்டு, பெருமளவில் தண்ணீா் வீணாகிறது. பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாக கண்மாய் அருகே ஓடுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தும் , இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குழாயைச் சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

Story image