வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் உள்ளது தண்ணீா்ப்பந்தல். இந்தப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீா் திட்ட பிரதானக் குழாய், அதிக அழுத்தம் காரணமாக அடிக்கடி சேதமடைந்து வருகிறது. அந்த நேரங்களில் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது.
தற்போது தண்ணீா்ப்பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குழாய் உடைந்து 3 நாள்களாகியும் சரிசெய்யப்படவில்லை. குடிநீா் வெளியேறி வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. குடிநீா் இன்றி அவதிப்பட்டுவரும் நிலையில் குழாய் உடையாமல் தகுந்த முறையில் பழுது பாா்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.
தொடர்புடையது

அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வீணாகும் அவலம்

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


