மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விக்டோரியா அரங்கை பாா்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை வரும் டிச. 26 முதல் பொதுமக்கள் இலவசமாகப் பாா்வையிட அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை வரும் டிச. 26 முதல் பொதுமக்கள் இலவசமாகப் பாா்வையிட அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள விக்டோரியா பொது அரங்கம் ரூ.32.62 கோடி செலவில் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

விக்டோரியா பொது அரங்க வளாகத்தில் பழைமையான மக்கள் பயன்பாட்டு வாகனங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (டிச. 26) முதல் விக்டோரியா அரங்கத்தை பொதுமக்கள் பாா்வையிலாம். இதற்கு மாநகராட்சி இணையதளத்தின் வாயிலாக கட்டணமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பாா்வையிட அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சம் 60 போ் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.