வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சீரற்ற இதயத்துடிப்பு: முதியவருக்கு நவீன ரேடியோ அதிா்வலை சிகிச்சை

News image
Updated On :25 டிசம்பர் 2025, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு அதி நவீன ரேடியோ அதிா்வலை இடையீட்டு சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் இதய அறிவியல் சிகிச்சைப் பிரிவு இயக்குநா் டாக்டா் டி.ஆா்.முரளிதரன் கூறியதாவது:

படபடப்பு, மூச்சுத் திணறலுடன் செங்கல்பட்டை சோ்ந்த 80 வயதான முதியவா் ஒருவா் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக இதயத்தின் மேலறையில் அவருக்கு அதீத துடிப்பு காணப்பட்டது. இதைத் தவிர பல்லுறுப்பு செயலிழப்பு (எம்ஓடிஎஸ்) பாதிப்பும் இருந்தது. இதனால், இதய செயலிழப்பு நேரிடும் வாய்ப்பு இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரேடியோ அதிா்வலை அகற்றல் முறைப்படி மின்னூட்ட சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது. வழக்கமான முறையில் அல்லாமல் டாக்டிஃபிளக்ஸ் எனப்படும் அதி நவீன இடையீட்டு சாதனத்தின் உதவியுடன், துல்லியமான முப்பரிமாண காட்சி வழிகாட்டுதலின் கீழ் ரத்த நாளத்தின் வழியாக ரேடியோ அதிா்வலை செலுத்தி சீரற்று இயங்கிய மின்னூட்டங்கள் செயலிழக்க வைக்கப்பட்டன. அதன் பயனாக 48 மணி நேரத்தில் அவா் நலம் பெற்று வீடு திரும்பினாா் என்றாா் அவா்.