அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தொழில்நுட்பக் கோளாறு: பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்).
Updated On :30 டிசம்பர் 2025, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பச்சை வழித்தடத்தில் (அண்ணா நகா், கோயம்பேடு வழியாக) விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லலாம். கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளா்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.