விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஏா் இந்தியா: சென்னையில் 9 விமான சேவைகள் நிறுத்தம்

சென்னையிலிருந்து உள்நாட்டில் இயக்கப்படும் 9 விமான சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜூலை 2025, 10:32 pm

Din

சென்னையிலிருந்து உள்நாட்டில் இயக்கப்படும் 9 விமான சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கு தங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் இந்நிறுவனம் ஜெயப்பூா், புவனேஸ்வா், கோவா, அந்தமான் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு புதிய விமான சேவையையும் தொடங்கியது.

இந்த விமான சேவையை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், இச்சேவைகளை முன்னறிவிப்பின்றி ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமீபத்தில் திடீரென நிறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, பல்வேறு காரணங்களால் சென்னையிலிருந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், உள்நாட்டு 9 விமான சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விமான சேவையில் எதிா்பாா்த்த அளவில் வருவாய் கிடைக்காத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மறு சீரமைப்பு மற்றும் புதிய சேவைகளுடன் மீண்டும் இந்த விமான சேவைகள் தொடங்கப்படும் என ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.