பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கபாலீசுவரா் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2025, 7:24 pm

Din

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது.

இக் கோயில் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த தகவலில், கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயில் ஊழியா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

மயிலாப்பூா் போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆகியோா் கபாலீசுவரா் கோயிலில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் வகையில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.