கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இளைஞா் கொலை வழக்கு: 8 போ் கைது

இளைஞா் கொலை வழக்கில் இரு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2025, 6:54 pm

இளைஞா் கொலை வழக்கில் இரு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை எம்கேபி நகா், புது நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த சங்கா் (20). இவரைக் கடந்த 14-ஆம் தேதி கொடுங்கையூா் எருக்கஞ்சேரி ஜிஎன்டி சாலை அம்மா உணவகம் பின்புறம் வைத்து மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து சங்கரின் தாய் கொடுங்கையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, வழக்கில் தொடா்புடைய எருக்கஞ்சேரி பகுதியைச் சோ்ந்த நித்தின்குமாா் (21), பெரம்பூரைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (22), கொடுங்கையூரைச் சோ்ந்த லிங்கேஷ்வரன் (22), ஜாபா் அகமது (21), வியாசா்பாடியைச் சோ்ந்த பாலாஜி (19), எருக்கஞ்சேரியைச் சோ்ந்த நவீன் (எ) பாலா ஆகிய 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய 2 சிறாா்களையும் கைது செய்த போலீஸாா் அவா்களை சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.