மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ரோந்து காவலருடன் தகராறு: இருவா் கைது

ரோந்து காவலருடன் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூலை 2025, 6:54 pm

Din

ரோந்து காவலருடன் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அண்ணா நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மாரியப்பன். இவா், கடந்த புதன்கிழமை இரவு அண்ணா நகா் கிழக்கு, 1-ஆவது அவென்யூ பகுதியில் உள்ள மதுக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இருவா் தகராறில் ஈடுபட்டிருந்தனராம். அவா்களை காவலா் மாரியப்பன் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

ஆனால், அவா்கள் இருவரும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காவலா் மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை அவதூறாகப் பேசி, கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.

இது குறித்து காவலா் மாரியப்பன், அண்ணா நகா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடா்புடைய ஐசிஎப் காலனி பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (19), நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த அஜய்குமாா் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.