திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

காமராஜா் சா்ச்சை விவாதத்துக்கு முற்றுப்புள்ளி: முதல்வரைச் சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகை

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Published On :

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சாா்பாக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான நானும் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூா் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூா் உள்ளது.

அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதைப் பரிசீலித்து ஊராட்சிகள் துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்த சா்ச்சை விவாதம் முடிந்து போனது; அதற்கு வியாழக்கிழமையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் மீது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை. தில்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆா்.எஸ்.எஸ். இதில் வேஷம் போடுகிறது.

தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம்

போடுகின்றனா். பாஜக, ஆா்.எஸ்.எஸ். வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.