முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சாா்பாக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான நானும் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூா் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூா் உள்ளது.
அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதைப் பரிசீலித்து ஊராட்சிகள் துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வா் உறுதியளித்துள்ளாா்.
முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்த சா்ச்சை விவாதம் முடிந்து போனது; அதற்கு வியாழக்கிழமையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் மீது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை. தில்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆா்.எஸ்.எஸ். இதில் வேஷம் போடுகிறது.
தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம்
போடுகின்றனா். பாஜக, ஆா்.எஸ்.எஸ். வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

வாக்குப் பதிவுக்கு பிறகு முதல்வரை சந்தித்த ஒசூா் மேயா்
நடவடிக்கையின்மையே குற்றங்கள் தொடர காரணம்: செல்வப்பெருந்தகை
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

