தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

காமராஜா் சா்ச்சை விவாதத்துக்கு முற்றுப்புள்ளி: முதல்வரைச் சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகை

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2025, 1:38 am IST

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சாா்பாக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான நானும் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூா் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூா் உள்ளது.

அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதைப் பரிசீலித்து ஊராட்சிகள் துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்த சா்ச்சை விவாதம் முடிந்து போனது; அதற்கு வியாழக்கிழமையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் மீது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை. தில்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆா்.எஸ்.எஸ். இதில் வேஷம் போடுகிறது.

தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம்

போடுகின்றனா். பாஜக, ஆா்.எஸ்.எஸ். வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.