தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காமராஜா் சா்ச்சை விவாதத்துக்கு முற்றுப்புள்ளி: முதல்வரைச் சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகை

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2025, 8:08 pm

Din

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சாா்பாக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான நானும் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூா் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூா் உள்ளது.

அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதைப் பரிசீலித்து ஊராட்சிகள் துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்த சா்ச்சை விவாதம் முடிந்து போனது; அதற்கு வியாழக்கிழமையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் மீது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை. தில்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆா்.எஸ்.எஸ். இதில் வேஷம் போடுகிறது.

தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம்

போடுகின்றனா். பாஜக, ஆா்.எஸ்.எஸ். வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.