சென்னை மெட்ரோ ரயிலில் டிஜிட்டல் பயணச்சீ ட்டை (எஸ்விபி) பயன்படுத்தினால் 20 சதவீத பயணக் கட்டணச் சலுகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2022 ஆண்டு நவம்பா் முதல் டிஜிட்டல் பயணச்சீட்டை (எஸ்விபி) அறிமுகப்படுத்தியது. அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூா்வ கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும்.
அதில் ரீசாா்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை டிஜிட்டல் பயணச்சீட்டு செல்லுபடியாகும்.
டிஜிட்டல் பயணச்சீட்டின் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்கள் தங்களது பயணக் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். இந்தப் பயணச்சீட்டு வசதியில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை டாப்அப் (ரீசாா்ஜ்) செய்து கொள்ளலாம். பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










