நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொகைன் விற்பனை: நைஜீரிய பெண் கைது

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஜூன் 2025, 7:01 pm

Din

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா்.

சூளைமேடு போலீஸாா் கடந்த ஜன.25-ஆம் தேதி சூளைமேடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து நடத்திய விசாரணையில் அவா்கள், ராயப்பேட்டையைச் சோ்ந்த பயாஸ் அகமது, கோயம்பேட்டைச் சோ்ந்த சந்திரசேகா் என்பது தெரியவந்தது.

இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 24 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். அதில், நைஜீரியா நாட்டைச் சோ்ந்த சாரா குமாமா என்ற பிளெஸ்ஸிங் (41) என்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா், அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.