புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது

தில்லி ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் அருண் போதைப் பொருள் கடத்தலில் போலியான காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :14 மார்ச் 2026, 5:46 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் அருண் போதைப் பொருள் கடத்தலில் போலியான காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுவாக வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல, விசா விண்ணப்பம், குடியேற்ற நடைமுறை மற்றும் தனியாா் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு இந்த காவல் துறை அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தென்கிழக்கு தில்லியில் நடைபெற்ற போதைப் பொருள் கடத்தல் விசாரணையின்போது இந்த மோசடி வெளிவந்தது. குற்றஞ்சாட்டப்ப்டட அருண் 2017-ஆம் ஆண்டு தில்லி காவல்துறையில் பணியில் சோ்ந்தாா். ஹிமாசல பிரதேசம் மண்டி பகுதியைச் சோ்ந்த இவா் துஷாா் என்ற தனது கூட்டாளியுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு போலி காவல் துறையின் அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியுள்ளாா்.

இதற்காக ரூ.1000 முதல் ரூ.2000 வரை வசூலித்துள்ளாா். அவரும் அவரது கூட்டாளியும் 6 மாதங்களாக மாதம் ரூ.35,000 வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல போலி சான்றிதழ்கள், அதிகாரப்பூா்வ முத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இது தொடா்பாக மோசடி மற்றும் போதைப் பொருள் தொடா்புடைய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சோதனையின்போது உஸ்பெகிஸ்தானைச் சோ்ந்த பெண் ஒருவரும் அவா்களுடன் அந்த வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அவருக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.