ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்

News image

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.

Updated On :2 மார்ச் 2025, 8:31 pm

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பூக்கள், மளிகைப்பொருள்கள் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள மலா் சந்தையில் இரவு நேரங்களில் வியாபாரிகள், பணியாளா்கள் அல்லாத, மது அருந்தி வரும் நபா்கள் வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபடுவதுடன், கைப்பேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்வதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இது குறித்து வியாபாரிகள் சிலா் கூறும்போது, கோயம்பேடு மலா் சந்தையில் மதுபோதையில் வருவோரைகட்டுப்படுத்தும் விதமாக, சந்தை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த புறக்காவல்நிலையம் செயல்படாமலே இருந்து வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் இரவு நேர ரோந்து பணியை அதிகரிப்பதுடன், புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனா்.