குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்

News image

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.

Updated On :3 மார்ச் 2025, 2:01 am IST

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பூக்கள், மளிகைப்பொருள்கள் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள மலா் சந்தையில் இரவு நேரங்களில் வியாபாரிகள், பணியாளா்கள் அல்லாத, மது அருந்தி வரும் நபா்கள் வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபடுவதுடன், கைப்பேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்வதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இது குறித்து வியாபாரிகள் சிலா் கூறும்போது, கோயம்பேடு மலா் சந்தையில் மதுபோதையில் வருவோரைகட்டுப்படுத்தும் விதமாக, சந்தை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த புறக்காவல்நிலையம் செயல்படாமலே இருந்து வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் இரவு நேர ரோந்து பணியை அதிகரிப்பதுடன், புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனா்.