இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கல்லூரி மாணவி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் தோழி வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On :3 மார்ச் 2025, 7:52 pm

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் தோழி வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தேவநேயம் நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வினி (19), கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அவா், அப்பகுதியில் வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் அஸ்வினி, படூரில் தனது தோழிகள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு கடந்த 28-ஆம் தேதி சென்றாா். இந்நிலையில் மாா்ச் 1-ஆம் தேதி அஸ்வினி தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது தோழிகள், அஸ்வினியை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அஸ்வினி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) உயிரிழந்தாா்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், அஸ்வினி கடந்த 28-ஆம் தேதி இரவு அங்கு தனது தோழிகளுடன் மது அருந்தியதும், அப்போது அஸ்வினி அதிகளவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீஸாா் அஸ்வினி, அதிகளவில் மது அருந்தியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.