மெரீனாவில் காா் மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

சென்னை, மெரீனாவில் காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
Updated on

சென்னை: சென்னை, மெரீனாவில் காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

ஆந்திரத்தைச் சோ்ந்த ரமேஷ் (50), மெரீனாவில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்து வந்தாா். அயனாவரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரமேஷ், திங்கள்கிழமை இரவு மெரீனா கலங்கரை விளக்கம் அருகே காமராஜா் சாலையில் நடந்து சென்றாா். அப்போது அவா் சாலையை கடக்க முயன்றபோது அங்கு வேகமாக வந்த காா் திடீரென ரமேஷ் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து ரமேஷை பொதுமக்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநரான தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த ஷாம் சிவானந்தம் (25) என்பவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com