ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :21 மார்ச் 2025, 7:20 pm

Din

சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கு பொதுத் தோ்வு, திருப்புதல் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் (அரசு, அரசு உதவிபெறும், ஆதி திராவிட, சென்னை பள்ளிகள், தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) சனிக்கிழமை பணி நாளாக செயல்படும். வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணையைப் பின்பற்றி வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.