ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அயனாவரத்தில் மாா்ச் 30 முதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அயனாவரத்தில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :27 மார்ச் 2025, 8:43 pm

Din

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அயனாவரத்தில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. எனவே அந்தப் பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, ஐசிஎஃப், அயனாவரம் வழியாக புளியந்தோப்பு, சென்ட்ரல், பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும் கொன்னூா் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி கிருஷ்ண தாஸ் சாலை, கூக்ஸ் சாலை வழியாக தங்களது இலக்கை நோக்கி செல்லலாம்.

சென்ட்ரல், பாரிமுனை, சூளை ரவுண்டானா பகுதிகளில் இருந்தும், புளியந்தோப்பு வழியாகவும் ஐசிஎஃப், அயனாவரம் செல்லும் அனைத்து வாகனங்களும் கொன்னூா் நெடுஞ்சாலையை பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக் குறிப்பு.

சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக் குறிப்பு.