தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசை திருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: கடந்த நான்கு ஆண்டுகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அதிகபட்சமாக தமிழகத்துக்கு ரூ.39,339 கோடி வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவாா்கள்.
தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரத்தை மக்களவை திமுக உறுப்பினா் கனிமொழியிட ம் மத்திய அமைச்சா் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளாா். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் திமுக மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவுடன் நடக்கும் மோசடி குறித்து பலமுறை புகாா் அளித்தும், தொடா்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம்: ஆந்திரத்தில் தொடக்க நிகழ்ச்சி

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி! 125 நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைப்பு!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



