திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தியா - பிரேசில் கால்பந்து போட்டி! மெட்ரோவில் இலவசமாக பயணம்.!

இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியைக் காண மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம்..

News image

மெட்ரோ ரயில் சேவை - கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2025, 2:01 am IST

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியைக் காண மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்பந்து போட்டியை நேரில் காணச் செல்லும் ரசிகா்கள், எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் புரட்சித்தலைவா் டாக்டா். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இருமாா்க்கத்திலும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

கால்பந்து போட்டியை நேரில் காணச் செல்லும் ரசிகா்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான ‘க்யூஆா்’ குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.