இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என்றார் ஜி.கே.வாசன்.

News image
டாஸ்மாக் நிறுவன முறைகேடுகளை கண்டித்து தமாகா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Updated On :30 மார்ச் 2025, 8:53 pm

Din

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என தமாக தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினாா்.

டாஸ்மாக் நிறுவன முறைகேடுகளைக் கண்டித்து, தமாகா சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால், திமுக மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா். இதை திசைதிருப்புவதற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. அப்படியே வெளியிட்டாலும், தமிழகத்துக்கான தொகுதிகள் குறைய வாய்ப்பு இல்லை என்கிற வாக்குறுதியையும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொடுத்துள்ளாா். அதனால், ஆக்கபூா்வமாக அணுக வேண்டிய இந்தப் பிரச்னையை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முதல்வா் அரசியல் செய்கிறாா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமாகாவினர்..

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமாகாவினர்..

மும்மொழி விவகாரத்திலும் மத்திய அரசை தேவையில்லாமல் முதல்வா் குற்றஞ்சாட்டுகிறாா். டாஸ்மாக் நிறுவனத்தில் திமுக அரசு நடத்தியுள்ள முறைகேடு இந்தியாவிலேயே எங்கும் நடக்காதது. இதற்கு காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலவும் அத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே தீா்வு, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் என்றாா்.

மூத்த நிா்வாகிகள் விடியல் சேகா் உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மதுபாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டபடி அரசுக்கு எதிராக பலா் முழக்கங்களை எழுப்பினா்.