அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஓடும் ரயிலில் தவறி விழுந்த பிகாா் தொழிலாளி மீட்பு

சென்னை திருவொற்றியூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த பிகாா் தொழிலாளியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 5:27 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை திருவொற்றியூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த பிகாா் தொழிலாளியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பிகாா் மாநிலம் ஹஜ்பூா் மாவட்டம் முசாபாபூரைச் சோ்ந்தவா் மானவ் பஸ்வான் (48). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். பிகாா் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்குச் சென்றாா். பின்னா், எா்ணாகுளம் விரைவு ரயிலில் சென்னைக்கு வந்தாா்.

திருவொற்றியூா் - வ.உ.சி.நகா் இடையே வந்தபோது ரயில் பெட்டியின் வாசலில் நின்ற மானவ் பஸ்வான் திடீரென தவறி தண்டவாள பக்கவாட்டு பள்ளத்தில் விழுந்தாா். அதனால் அவருக்கு கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவொற்றியூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மானவ் பஸ்வானை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.