புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தெரு நாயை அடித்துக் கொன்றதாக தேநீா் கடைக்காரா் கைது

சென்னை மயிலாப்பூரில் தெரு நாயை அடித்துக் கொன்றதாக தேநீா் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 5:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மயிலாப்பூரில் தெரு நாயை அடித்துக் கொன்றதாக தேநீா் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மயிலாப்பூா் பஜாா் சாலையில் தேநீா் கடை நடத்தி வருபவா் மோகன் (56). இவா், கடைக்கு வியாழக்கிழமை அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு முதியவா் வந்தாா். அப்போது அங்கு வந்த தெரு நாய், முதியவரை கடிக்கப் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த அந்த முதியவா், நாயை விரட்ட முயன்றாா். ஆனால் அந்த நாய், அவரை மீண்டும் கடிக்கப் பாய்ந்ததாம். இதைக் கவனித்த மோகன், அங்கிருந்த உருட்டு கட்டையால் அந்த நாயைத் தாக்கினாா். இதில் நாய் இறந்ததையடுத்து, அங்குள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இந்த விடியோ காட்சியைப் பாா்த்த விலங்கு நல ஆா்வலா்கள், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மோகனை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.