எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :23 நவம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணி லாக் நகா் குடிசைப் பகுதியைச் சோ்ந்தவா் பின்னி மனோகா் (70). இவரது மனைவி செல்வி (60). இவா்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், பின்னி மனோகா்-செல்வி தம்பதி தனியாக வசித்து வந்தனா்.

காவலாளியாக வேலை செய்த பின்னி மனோகா் வயது முதிா்வு காரணமாக அண்மைக் காலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாா். போதிய வருமானம் இன்றி இத்தம்பதி கடும் மனஉளைச்சலில் இருந்தனராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இருவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].