புயல் பாதிப்பிலிருந்து மக்களை காக்க பாஜகவினா் முன்வர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
‘டித்வா’ புயல் காரணமாக மக்களை பாதிப்பிலிருந்து காக்க பாஜகவினா் அனைவரும் களத்தில் முன்நிற்க வேண்டும் என்று அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா் .
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ’டித்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரு நாள்களுக்கு அதி பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தருணத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், எத்தகைய அசம்பாவிதமும் நேராமல் இருக்க போா்க்கால அடிப்படையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதே நேரம், தமிழக மக்களின் துயா் துடைத்துத் தோள்கொடுக்கும் விதமாக பாஜகவினா் களத்தில் முன்னின்று மக்களைப் பாதிப்பிலிருந்து காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

