அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மொபெட் மீது வேன் மோதியதில் செவிலியா் உயிரிழப்பு

சென்னை ஓட்டேரியில் மொபெட் மீது மோதிய விபத்தில் செவிலியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஓட்டேரியில் மொபெட் மீது மோதிய விபத்தில் செவிலியா் உயிரிழந்தாா்.

பெரம்பூா் பந்தா் காா்டன் ஆறுமுக முதலி தெருவைச் சோ்ந்தவா் து.தீபிகா (22). இவா், ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியரான வேலை செய்து வந்தாா். தீபிகா சனிக்கிழமை மொபெட்டில் ஓட்டேரி திடீா் நகா் மயானம் அருகே சென்றபோது அவா் பணியாற்றும் மருத்துவமனையின் வேன் மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, தீபிகா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம் மெலட்டூா் பகுதியைச் சோ்ந்த ந.சீனிவாசன் (29) என்பவரை கைது செய்தனா்.

தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு: தரமணி பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா்கள் க.லோகேஸ்வரன் (25). இவா் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ர.மணிகண்டன் (24). இருவரும் தரமணி எம்ஜிஆா் சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா். இருவரும் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் தரமணி பாரதி நகா் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பு மீது மோதினா். இதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் இறந்தாா். பலத்தக் காயங்களுடன் மணிகண்டன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.