வண்ண மீன் வா்த்தக மையத்தில் கடைகளை வாடகைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம்

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு எடுக்க விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடேதெரிவித்துள்ளாா்.
Published on

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு எடுக்க விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடேதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கொளத்தூரில் உள்ள வண்ண மீன் வளா்ப்போா் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.53.50 கோடியில் வண்ண மீன்கள் விற்பனை மற்றும் அதைச் சாா்ந்த துணை கருவிகள் விற்பனை கடைகள், உணவரங்கம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையம் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்த வா்த்தக மையத்தில் அமைந்துள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் கடைஒதுக்கீடு நிபந்தனைகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.6-ஆம் தேதி மாலை 3 மணிக்குள், இணை இயக்குநா்(மண்டலம்), அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, நிா்வாகக் கட்டடம், டிஎம்எஸ் வளாகம், 3-ஆவது தளம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்றம் முகவரிக்கு அனுப்பலாம்.

கூடுதல் தகவல்களுக்கு அலுவலக தொலைபேசி: 044-24328596 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com