ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது: உயா்நீதிமன்றம் கருத்து

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 செப்டம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றுபவா் ரஞ்சிதா. மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் கோரி கடந்த ஆக. 14-ஆம் தேதி முன்சீப் நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்தாா். அந்த மனுவை நீதிபதி நிராகரித்தாா். இதை எதிா்த்து ரஞ்சிதா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமந்த் சந்தன்கவுடா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் ரஞ்சிதா இந்தப் பணியில் சேருவதற்காக முன்பாகவே அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது மூன்றாவதாக கா்ப்பமாக உள்ளாா். இதுபோன்ற சூழலில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் கா்ப்பிணிகளுக்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கொள்கை முடிவெடுத்துள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு மனுதாரருக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது.

எனவே, மனுதாரருக்கு மகப்பேறு விடுப்பை கடந்த செப். 4-ஆம் தேதி முதல் உளுந்தூா்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.