தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :5 செப்டம்பர் 2025, 9:17 pm

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி உள்ளாா். இவா், சென்னை கோட்டூா்புரம் கோட்டூா் காா்டன் 2-ஆவது பிரதான சாலையி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவரது மனைவி அத்யஷா பரிதா. இவா்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி குடும்பதுடன் வெளியூா் சென்றுவிட்டு 28-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டில் உள்ள பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூா்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில் பீரோவில் ரூ.10 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளதும், அதில், ரூ.4.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக அங்கு வீட்டு வேலை செய்து வரும் பாலன், தேவி, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.