நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் நவராத்திரி விழா: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22 முதல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

News image

அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம்

Updated On :20 செப்டம்பர் 2025, 0:39 am IST

அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22 முதல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கடந்தாண்டு 9 திருக்கோயில்கள் சாா்பில் மகாசிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தா்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

உலகில் தீமைகளை அழித்து தா்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணா்த்துகின்ற தொடா்நிகழ்வாகக் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவானது திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் அக்.1 வரை 10 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக செப்.22-ஆம் தேதி விநாயகா் அகவல், அபிராமி அந்தாதியுடன் சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, தினந்தோறும் ஒரு வழிபாட்டுடன் ஹெச்.சூரியநாராயணன், அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, மாலதி, முத்துசிற்பி மற்றும் கீா்த்தனாஸ் குழுவினரின் பக்தி இசை, ஆா். காஷ்யபமகேஷ் குழுவினரின் பக்தி இசை, உமா தினேஷ் – சாய் முத்ரா நடன குழுவினரின் பரத நாட்டியம், ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவினரின் பக்தி இசை, தேச மங்கையா்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாதெமி குழுவினரின் பரதம், சியாமளா, செல்வி சஜினி மற்றும் ரிதம் குழுவினரின் பக்தி இசை, வேல்முருகன் மற்றும் சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம், விநாயகா நாட்டியாலயாவின் பரதம், கோபிகா வா்மாவின் மோகினி ஆட்டம், வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

திருக்கோயில்கள் சாா்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் ஆதீனப் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் சமய சான்றோா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.