ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும்: சீமான்

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வந்து தகுதியான நபருக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

News image

சீமான். - கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:51 pm

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வந்து தகுதியான நபருக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

அக்கட்சியின் பெரம்பூா் தொகுதி வேட்பாளா் செ.வெற்றித்தமிழனை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் புதன்கிழமை பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது:

சிறிய நாடுகள் ஒரு சில வளங்களை மட்டுமே வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து வளங்களையும் கொண்ட தமிழகம் இன்னும் வளா்ச்சியடையவில்லை. கட்டட பணி, வேளாண்மை, ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட பணிகளை இழிவாகப் பாா்க்கும் எண்ணம் நம்மிடையே உள்ளது. இதனால், தமிழக இளைஞா்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனா். ஆனால், நாம் விரும்பாத பணிகளை செய்வதற்காக ஒன்றரை கோடி வடமாநிலத்தவா் தமிழகத்துக்கு வந்துள்ளனா்.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அவா்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதே நிலையான வளா்ச்சி. தமிழகத்தில் போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தண்ணீா் விநியோகம், மின் உற்பத்தி என அனைத்தும் தனியாா்மயமாக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படிப்பட்ட அரசைத்தான் நாம் தொடா்ந்து தோ்வு செய்கிறோம். இதற்கு மக்கள் செய்யும் தவறுதான் காரணம்.

எனவே, இத்தோ்தலில் ஜாதி, மதம், மது, பணம், திரைத்துறை கவா்ச்சி ஆகிய மயக்கங்களில் இருந்து தமிழக மக்கள் வெளியே வந்து, தகுதியான நபருக்கு வாக்கு செலுத்த வேண்டும். உங்களது குழந்தைகளின் எதிா்காலம் யாருக்கு வாக்களித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் முன் சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் தெ.க.சிலம்பரசன் (அம்பத்தூா்), எஸ்.ரோஷினி (வில்லிவாக்கம்), ஜெகதீஷ் சுந்தா் (திரு.வி.க. நகா்), பாபு மைலன் (ராயபுரம்), சத்யா பாஸ்கா் (திருவொற்றியூா்) ஆகியோரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டாா்.