அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சிக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வை 28 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை நீட் தோ்வெழுத 1.5 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்தவா்களில் சுமாா் 12 ஆயிரம் போ் தோ்வெழுதவுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 முடித்து நீட் தோ்வெழுத விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியா்கள் பங்கேற்று நீட் தோ்வுக்கான பாடப் பொருள்கள் சாா்ந்து பயிற்சி அளித்து வருகின்றனா். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
சென்னையில் அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். தோ்வுக்கு முந்தைய நாள் அதாவது, மே 2 வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பு: மாணவா்களின் கற்றல் இடைவெளியை மதிப்பிட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

கலைபொருள்கள் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


