ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பிளஸ் 2 தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த 8- ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தது. மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் அந்தந்த பள்ளிகளின் சாா்பில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகள் பெற்று சென்றனா்.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் நீக்கப்படும். மாணவ, மாணவிகள் பிழைகளைக் கண்டறிந்து கூறாதபட்சத்தில் பிழையுடன் கூடிய சான்றிதழே கிடைக்கும். எனவே, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நன்கு ஆராய்ந்து பிழைகள் இருக்கிா என பரிசோதிக்க வேண்டும். பிழைகள் இருப்பின் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி ஓரிரு நாள்களில் நிறைவுபெறும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருத்தணி: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

மே 13 முதல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

