‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்ற பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகள். - (கோப்புப்படம்)

Updated On :23 மே 2026, 1:01 am IST

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி வெளியானது. இதில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெள்ளிக்கிழமை முதல் வழங்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு, காந்திஜி சாலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை சுகந்தி தலைமையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், அசல் மாற்றுச் சான்றிதழும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், மேல்நிலைப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பு தொடர விருப்பம் தெரிவித்தனா். இதனால் அதே பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சோ்க்கை நடைபெற்றது. உயா்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றோருடன் வந்து பெற்று, மேல்நிலை வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கச் சென்றனா்.

அசல் மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயா், இன்ஷியல் உள்ளிட்டவற்றில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து பிழையை திருத்திக்கொண்டு, அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம் என்று பள்ளி ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.