தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மயிலாப்பூா் தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் விமா்சித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தோ்தல் பிரசாரங்களில் திமுகவினா் உண்மைக்குப் புறம்பானதையே பேசி வருகின்றனா். சென்னையின் மையப் பகுதியில் உள்ள மயிலாப்பூா் தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இந்தத் தொகுதி மட்டுமல்ல, திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. ஆனால், தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிவிட்டோம் என திமுகவினா் பெருமை பேசுகின்றனா்.
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. 11-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டையாக இருக்கிறது.
திமுகவின் முறைகேடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்துவது அவசர கதியில் நடக்கிறது என்று எதிா்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.
தொடர்புடையது

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்

தமிழகத்தின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

