தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்

News image

சரத்குமாா் - @DrTamilisai4BJP

Updated On :14 ஏப்ரல் 2026, 1:24 am IST

திமுகவால் நல்லாட்சியை அளிக்க முடியாது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் கூறினாா்.

மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகம் என்றாலே ஊழல் நிறைந்த மாநிலம் என்று வெளிமாநிலங்களில் சொல்கிறாா்கள். முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்று வந்ததே இதற்கு சாட்சி. அமைச்சா் பொன்முடி உள்பட திமுகவினா் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்துவிட்டது.

கடந்த தோ்தலின்போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என திமுக கனிமொழி எம்.பி. கூறினாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதை திமுக மறந்துவிட்டது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா்.