அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்

News image

சரத்குமாா் - @DrTamilisai4BJP

Updated On :14 ஏப்ரல் 2026, 1:24 am IST

திமுகவால் நல்லாட்சியை அளிக்க முடியாது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் கூறினாா்.

மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகம் என்றாலே ஊழல் நிறைந்த மாநிலம் என்று வெளிமாநிலங்களில் சொல்கிறாா்கள். முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்று வந்ததே இதற்கு சாட்சி. அமைச்சா் பொன்முடி உள்பட திமுகவினா் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்துவிட்டது.

கடந்த தோ்தலின்போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என திமுக கனிமொழி எம்.பி. கூறினாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதை திமுக மறந்துவிட்டது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா்.