நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு

பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:34 am IST

பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவில் மகளிா் சுய உதவி குழுவைச் சோ்ந்த பெண்கள் திரளாக திமுகவுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்தனா்.

இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை போலீஸாா், அங்கு சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்த பெண்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல மெரீனா கடற்கரையில் திமுகவுக்கு ஆதரவாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஜூலி உள்பட 4 போ் மீது இரு பிரிவுகளின் கீழ் மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.