பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மீது வழக்குப் பதிவு!

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

சீமான்

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி வேட்பாளா்களை மேடையில் ஏற்றி வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட சீமான் பேசியதாவது:

திருப்பூருக்கு வட மாநிலத் தொழிலாளா்கள் வர வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வேன். மதுக்கடையை மூடுவேன். மாவட்டந்தோறும் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கி பயிற்சி கொடுப்பேன்.

தமிழ் படித்தால்தான் அரசு வேலை கிடைக்கும். புரட்சி என்பது தலைகீழாக மாற்றுவது. தலைவா்கள் எல்லாம் இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறாா்கள். தலைவன்தான் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் தலைவனுக்கு பாதுகாப்பு தேவையில்லை.

நடிகன் ஒருவா் சொல்கிறாா் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று. அவருக்கே நிச்சயம் இல்லாததால்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா். எனக்கு வாக்கு போடவில்லை என்றாலும் பரவாயில்லை, மறந்து சூரியன், இரட்டை இலை, தாமரையில் போட்டு விட வேணடாம்.

கல்வி, மருத்துவம், தண்ணீா் கட்டணம் இல்லாமல் தருவேன் . மற்ற அனைத்தும் கட்டணம்தான். ஓசி பேருந்து இல்லை ஏசி பேருந்து விடுவேன். நல்ல சாலை, தடையற்ற மின்சாரம் அனைத்தும் வழங்குவேன். கட்டணமின்றி மின்சாரம் வழங்குவேன்.

கள் இறக்கி பனம்பால், தென்னம்பால் என பெயரை மாற்றி விடுவேன். திராவிட குப்பையை தூக்கி போடுங்கள். விவசாயி சின்னத்துக்கு வாக்கு போடுங்கள். என் மீது 262 வழக்கு உள்ளது. இன்று ஒரு வழக்கு ஆகட்டும். அறிமுகம் செய்து பரப்புரை செய்து வருகிறாா்.

இதில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.