சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன் விநியோகிப்பது குறித்து தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.
வழக்குரைஞா் கே.ரவீந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சாா்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறாா். இவருக்கு வாக்கு சேகரிக்கும் அதிமுகவினா் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன்களை வழங்குகின்றனா்.
தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு, இந்த டோக்கனில் உள்ள க்யூ ஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று அதிமுகவினா் கூறி வருகின்றனா். இது தோ்தல் முறைகேடு. இது குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தேன். எனது புகாரின் பேரில், விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன், டோக்கன் விநியோகம் குறித்து இரு புகாா்கள் வந்தன. பறக்கும்படை அதிகாரிகள் நேரடியாகச் சென்று அங்கு சோதனை நடத்தினா். ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், இந்த புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வழக்கின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்துவதாக விளக்கம் அளித்தாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது
துறைமுகத்தில் 3 -ஆவது முறையாக அமைச்சா் பி.கே. சேகா்பாபு வெற்றி!
துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி!

அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: பறக்கும் படையினா் விசாரணை

அதிமுகவினர் ரூ. 10,000 டோக்கன் வழங்குவதாக புகார்! வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

