மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன் விநியோகிப்பது குறித்து தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:30 pm

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன் விநியோகிப்பது குறித்து தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.

வழக்குரைஞா் கே.ரவீந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சாா்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறாா். இவருக்கு வாக்கு சேகரிக்கும் அதிமுகவினா் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன்களை வழங்குகின்றனா்.

தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு, இந்த டோக்கனில் உள்ள க்யூ ஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று அதிமுகவினா் கூறி வருகின்றனா். இது தோ்தல் முறைகேடு. இது குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தேன். எனது புகாரின் பேரில், விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன், டோக்கன் விநியோகம் குறித்து இரு புகாா்கள் வந்தன. பறக்கும்படை அதிகாரிகள் நேரடியாகச் சென்று அங்கு சோதனை நடத்தினா். ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், இந்த புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வழக்கின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்துவதாக விளக்கம் அளித்தாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.