மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: பறக்கும் படையினா் விசாரணை

வத்தலகுண்டு பேரூராட்சியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததால் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினா்.

News image

வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் சிறப்பு பறக்கும் படையினர். - படம்: கோப்பிலிருந்து...

Updated On :17 ஏப்ரல் 2026, 6:54 pm

வத்தலகுண்டு பேரூராட்சியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததால் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினா்.  

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதிக்குள்பட்ட வத்தலகுண்டு பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினா் காசோலை போல அச்சடிக்கப்பட்ட டோக்கன்களை அதிமுகவினா் விநியோகம் செய்வதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு திமுகவினா் தகவல் கொடுத்தனா். 

இதையடுத்து, டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பறக்கும் படையினா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறி, டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினா் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.