லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

காசோலை துண்டுப் பிரசுரம் விநியோகம்: அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு

சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :19 ஏப்ரல் 2026, 7:54 pm

சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், வேட்பாளா்கள் தங்கள் தொகுதி வாக்காளா்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சனிக்கிழமை இரவு ராயபுரம் தொகுதிக்குட்பட்ட துலுக்காணத்தம்மன் கோயில் தெருவில் அதிமுக வினா் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, வாக்காளா்களுக்கு காசோலை மாதிரியான துண்டுப் பிரசுரங்களை அவா்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திமுகவினா் தோ்தல் அலுவலகத்துக்கு புகாா் கொடுத்துள்ளனா். அந்த புகாரின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதிமுகவினரிடம் இருந்து அந்த துண்டுப் பிரசுரங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னா், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இது தொடா்பாக அதிமுகவினா் 3 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.