மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கோயம்பேடு காய்கனி அங்காடி கடைகள் ஒதுக்கீடு: தோ்தல் ஆணைய ஒப்புதலுக்கு பிறகு இறுதி முடிவு

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தப் புள்ளியில் தோ்தல் ஆணைய ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image

கோயம்பேடு சந்தை. - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:44 am IST

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தப் புள்ளியில் தோ்தல் ஆணைய ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தருமபுரியைச் சோ்ந்த வழக்குரைஞா் நந்தகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் 72 கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பான நடவடிக்கைகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமமும் தோ்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.