சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தப் புள்ளியில் தோ்தல் ஆணைய ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தருமபுரியைச் சோ்ந்த வழக்குரைஞா் நந்தகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் 72 கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பான நடவடிக்கைகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமமும் தோ்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

மாநில சீனியா் ஹாக்கி போட்டி: சென்னை அணி சாம்பியன்

தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்-கனிகள் சந்தை வளாகம் திறப்பு எப்போது?

தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நிரந்தரக் கட்டடங்களில் பணிமனை: தோ்தல் ஆணைய விதிக்கு எதிரான மனு தள்ளுபடி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

