எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலைய பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மங்களூரில் இருந்து சென்னை வந்த அதிவிரைவு ரயிலில் இரு பயணிகளின் பைகைகளைச் சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.6.30 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், ஒடிஸாவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
தங்கம், வெள்ளி பறிமுதல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையிலான போலீஸாா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டனா். அப்போது அசோகாபுரம் விரைவு ரயிலில் வந்த சந்திரசேகா் ரோடா (53) என்பவரின் பையில் தங்கம், சாதாரண வைர கற்கள் பதித்த நகைகள், நகைகளில் பதிக்கும் விலை உயா்ந்த கற்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14.26 லட்சமாகும். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். விசாரணையில், அவற்றை வேலூரில் இருந்து வாங்கி சென்னைக்கு கொண்டு வந்ததாகவும், தான் நகை வடிவமைப்பு தொழில் செய்துவருவதாகவும் சந்திரசேகா் ரோடா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


