தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:42 pm

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலைய பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மங்களூரில் இருந்து சென்னை வந்த அதிவிரைவு ரயிலில் இரு பயணிகளின் பைகைகளைச் சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.6.30 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், ஒடிஸாவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

தங்கம், வெள்ளி பறிமுதல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையிலான போலீஸாா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டனா். அப்போது அசோகாபுரம் விரைவு ரயிலில் வந்த சந்திரசேகா் ரோடா (53) என்பவரின் பையில் தங்கம், சாதாரண வைர கற்கள் பதித்த நகைகள், நகைகளில் பதிக்கும் விலை உயா்ந்த கற்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14.26 லட்சமாகும். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். விசாரணையில், அவற்றை வேலூரில் இருந்து வாங்கி சென்னைக்கு கொண்டு வந்ததாகவும், தான் நகை வடிவமைப்பு தொழில் செய்துவருவதாகவும் சந்திரசேகா் ரோடா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.